தென்காசி, ஜூன் 5: தென்காசியில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு தமுமுக மற்றும் மதினாநகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் சார்பில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முஸ்தபியா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்பு தொழுகைக்கு பள்ளிவாசல் தலைவரும், தமுமுக மாநில செயலாளருமான மைதீன்சேட்கான் தலைமை வகித்தார். பெருநாள் தொழுகையை தலைமை இமாம் ஆசிக் பிர்தவுசி நடத்தி உரை நிகழ்த்தினார். ஜமாஅத் செயலாளர் நாகூர்மீரான், பொருளாளர் அஹமதுஷா, தமுமுக மாவட்ட தலைவர் நயினார்முகம்மது, ஜமாஅத் துணை செயலாளர்கள் ஹாருண்ரஷீத் இப்ராகிம், ஷபாரகுமத்துல்லா, ஜமாஅத் செயற்குழு உறுப்பினர்கள் கோக்கர்ஜான்ஜமால், முன்னாள் கவுன்சிலர் சலீம், அஸ்ரப், நியாஸ், ரிசவுமுகம்மது, மசூதுஅலி, கோகோஅலி, முஹம்மது பிலால், அமான்அப்துல்ரகுமான், அபாபில்மைதீன், மைதீன், கே.மைதீன், சாகுல்ஹமீது, தமுமுக நிர்வாகிகள் கொலம்பஸ் மீரான், இறையடியான் ஷேக், ஆதம்பின்ஆஷிக், களஞ்சியம் பீர், ஜாபர்உசேன், ரம்ஜான், திவான்ஒலி, உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் சார்பில், நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி 9வது தெருவில் உள்ள அல்ஹூதா பள்ளி மைதானத்தில், நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. இபுராஹிம் சிறப்பு தொழுகையை நடத்தினார். ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் தலைமை இமாம் அப்துல் ரசீத், மார்க்க சொற்பொழிவு ஆற்றினார். இதில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர் ஏர்வாடி மற்றும் களக்காடு பகுதியை சேர்ந்த ஏழை முஸ்லிம் மக்களுக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.