×

உணவில் விஷம் வைத்து நாய், பூனைகளை கொன்றவர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மார்க்கெட் அருகே உள்ள முனுசாமி தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (45). நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன், பணி முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பியபோது, தெரு நாய் ஒன்று விரட்டி கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த நாயை கல்லால் அடித்துவிட்டு தப்பினார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் தினமும் இரவில் வேலை முடித்து விட்டு வரும்போது அந்த நாய் இவரை பார்த்து குரைத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த நாயை கொல்ல முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வரும்போது, உணவில் விஷம் கலந்து சம்பவ இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதை அந்த நாயும், அக்கம் பக்கத்தில் உள்ள 5 பூனைகளும் சாப்பிட்டு, சிறிது நேரத்தில் இறந்தன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், விஜயகுமார் உணவில் விஷம் வைத்தது தெரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...