×

ேகாரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மாவட்ட அளவில் போராட்டம் நீடாமங்கலத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

நீடாமங்கலம், ஜூன் 4: திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் நீடாமங்கலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது. மேட்டூர் அணை திறப்பதற்கு முன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகளை காலத்தில் தூர்வார வேண்டும். மாவட்ட பகுதிகளில் நெல், பருத்தி சாகுபடி ஓரளவு நடைபெற்று வருகிறது. மின்தடையால் இவைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். நீடாமங்கலம் பகுதிகளில் அதிக பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருவதால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். நன்னிலம் வட்டம் அன்னதானம் ஊராட்சி வானூர் கிராமத்தில் மண்புழு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டுள்ளது ஆனால் உண்மையான விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. தற்போது பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் நீடாமங்கலத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய காலை மாலை நேரங்களில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து போலீசாரை நியமித்து நெரிசலை சரி செய்ய வேண்டும். மக்கள் நலன் கருதி இந்த கோரிக்கைகளை ஏற்று சரி செய்யாவிட்டால் மாவட்டம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : district secretary ,farmers association ,
× RELATED டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் ஆபீசில் மனு