×

பொது விநியோக திட்டம் நீடாமங்கலத்தில் இருந்து 1,250 டன் அரிசி மூட்டைகள் நெல்லைக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், ஜூன் 4: திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன் களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் உள்ள நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை, வட்ட கிடங்குகள் மன்னார்குடி, கீழப்பாண்டி, மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி உள்ளிட்ட பகுதியிலிருந்து 100 லாரிகளில் 1250 டன் பொது ரக அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்(ரயில் பெட்டிகளில்) திருநெல்வேலி மண்டலத்திற்கு பொது விநியோக திட்டத்திற்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : Public Distribution Scheme ,Neemamangalam ,Paddy ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...