×

பொன்னமராவதி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம் மாற்றி அமைக்க கோரிக்கை

பொன்னமராவதி, ஜூன் 4: பொன்னமராவதி பேரூராட்சி அம்மன் சன்னதி வீதியில் உடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பூக்குடி வீதியில் இருந்து வலையபட்டி மலையாண்டி கோயில் செல்லும் தார்சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பம் வெறும் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் இக்கம்பத்திலிருந்து பிற இடங்களுக்கும், வீடுகளுக்கும் மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் எப்போது உடைந்து விழுமோ என்ற அச்சத்தில் சாலையில் செல்வோர் ஒருவித பயத்துடன் செல்கின்றனர். எனவே விபத்து நடக்கும் முன் சேதமடைந்த இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnamaravathi ,civilians ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...