×

அன்னவாசல் அருகே அரசு பள்ளிக்கு வர்ணம் பூசி தூய்மை செய்த இளைஞர்கள்

இலுப்பூர், ஜூன் 4: அன்னவாசல் அருகே அரசு பள்ளிக்கு சொந்த செலவில் வர்ணம் பூசி பள்ளி வளாகத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மை படுத்தியுள்ளனர். அன்னவாசல்  அருகே புதூர் ஊராட்சி காட்டுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளி உள்ளது.  கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள்  துவக்கப்பட்டன. இந்நிலையில் புதூர் ஊராட்சி காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த  இளைர்கள் ஊர் பொதுமக்களுடன்  பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தி வர்ணம் பூசி  பள்ளிக்கு வரும் குழந்தைகள் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தினர்.   அதே ஊரில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் மற்றும்  இளைஞர்கள்  நூலகம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடதக்கது. இதுகுறித்து  இப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெளி  நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர்.  இவர்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்கள்  இணைந்துள்ள வாட்ஸ் ஆப் குருப் நிதி திரட்டி இது போன்ற  பணிகளை செய்து  வருகின்றனர். பள்ளிக்கு வரும் குழந்தைகள் கல்வி கற்க நல்லதொரு சூழலை  ஏற்படுத்தி கொடுப்பதே இவர்களின் நோக்கம் ஆகும்.


Tags : government school ,Annavasal ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...