×

தா.பழூர் கடைவீதியில் அடுத்தடுத்த 3 கடைகளில் கொள்ளை

தா.பழூர், ஜூன் 4: தா.பழூர் அடுத்த பூவந்திகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (32). இவர் தா.பழூர் கடைவீதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பின்புற கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இவரது கடை அருகே உள்ள கார்த்திக் என்பவரின் உணவகம், அதன் அருகில் உள்ள பாலகங்காதரன் என்பவரது அட்சயா டீக்கடையிலும் கதவை உடைத்து மர்மநபர்கள் கடையினுள் புகுந்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Tags : robbery ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...