×

பெருமாநல்லூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு

அவிநாசி, ஜூன் 4:பெருமாநல்லூர் அருகே தட்டான்குட்டைகிளாங்காடுப் பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன்(58). இவர் நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக,  தனது வீட்டுற்கு அருகே உள்ள தோட்டத்து கிணற்றின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். கால்இடறியதால்  100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சுவாமிநாதன் தவறி விழுந்துள்ளார். அதில்  5 அடிக்கும் மேலாக தண்ணீர் இருந்ததால், சத்தம் போட்டு தத்தளித்துக் கொண்டிருந்தார். தகவலறிந்த மாவட்ட அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்ரமணி மற்றும் தீயணைப்பு குழுவினர் குழுவினர் 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி சுவாமிநாதனை உயிருடன் பாதுகாப்பாக  மீட்டனர். பின்னர் அவிநாசி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.


Tags : well ,Perumannallur ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...