×

ஓசூரில் அரசு, தனியார் ஐடிஐகளில் சேர 15ம்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

ஓசூர், ஜூன் 4: ஓசூர் அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அரசு ஐடிஐ துணை இயக்குநர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கம்பியாளர்(2வருடம்), கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர்(1வருடம்), கணினி ஹார்டுவேர் மற்றும் வலைதள பராமரிப்பு (1வருடம்), மின்பணியாளர்(2வருடம்), கம்மியர் மின்னணுவியல்(2வருடம்), பொருத்துநர்(2வருடம்).

அச்சுவார்ப்பவர்(1வருடம்), கம்மியர் கருவிகள்(2 வருடம்), கம்மியர் இயந்திரம் மற்றும் மின்னணுவியல்(2வருடம்), கம்மியர் மோட்டார்வண்டி(2வருடம்), கருவிமற்றும் அச்சு செய்பவர்(2வருடம்), கடைசலர்(2வருடம்), பற்றவைப்பவர்(1வருடம்) மற்றும் உற்பத்திமற்றும் தயாரிப்பு(2வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.  14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். உச்சவயது வரம்பு இல்லை. 8ம் வகுப்பு  தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இம்மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வுக்கு வரும்போது விண்ணப்பித்த சலான் மற்றும் அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்.

பயிற்சி காலத்தின்போது, மாதம்தோறும் ₹500 உதவித் தொகையாக வழங்கப்படும். இதைதவிர, விலையில்லா பாடபுத்தகம், வரைபடகருவிகள், லேப்டாப், சீருடை, சைக்கிள், பஸ் பாஸ், ஷூ வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உள்ளது. கலந்தாய்வு நாள் மற்றும் நேரம் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். தகுதியுள்ள மாணவ, மாணவிகள் ஓசூர் அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,ITIs ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!