×

பத்ரகாளியம்மன் கோயிலில் மகாசண்டி யாகம்

போச்சம்பள்ளி, ஜூன் 4: போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில், 108 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு மகாசண்டி யோகம் நடந்தது. மார்கண்டேய ரிஷியினால் கூறப்பட்ட தேவி மாஹாத்மியம் என்ற 700 ஸ்லோகங்கள், 13 அத்தியாயம் கொண்ட மந்திரங்கள் முழங்க யாகம் நடத்தப்பட்டது. மழை வேண்டி நடந்த யாகத்தில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Tags : Mahasandi Yagam ,
× RELATED கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் ஆயுதங்களுடன் கைது