×

ராயனூரில் குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் அவதி

கரூர், ஜூன் 4: ராயனூரில் குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் ராயனூரில் இருந்து தாந்தோணிமலை செல்லும் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாக இருக்கிறது. சாலையை செப்பனிடாமல் விட்டுவிட்டனர். இதனால் இருசக்கரவாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. பஞ்சர் ஒட்ட இடம்தேடி அலைய வேண்டியதிருக்கிறது. உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ryunur ,roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...