×

தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம்

தூத்துக்குடி, மே 30: தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் நாளை (31ம் தேதி) நடக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார். இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் நாளை (31ம் தேதி) காலை 11 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்எல்ஏ என்.கே.பெருமாள் முன்னிலை வகிக்கிறார். இதில் மக்களவை திமுக துணை தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி., சிறப்புரையாற்றுகிறார். இதில் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : delegates ,DMK ,Thoothukudi district ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...