×

கோவையில் காய்ச்சலுக்கு 3 பேர் பலி

கோவை, மே 30: கோவையில் காய்ச்சல் காரணமாக 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி கவுசல்யா மரகதம்(30). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சைபலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரமடை பகுதியை சேர்ந்தவர் துளசி(50). காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இதே போல், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வபுரம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி(50) என்பவர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு காய்ச்சல் காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coimbatore ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...