இலுப்பூர், மே 29: அன்னவாசல் அருகே வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தேரோட்டம் வரும் 3ம்தேதி நடைபெறுகிறது. அன்னவாசல் அருகே வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. துவங்கிய நாள் முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 8ம் நாளிலில் பொங்கல் வைத்தும், 9ம் நாளான 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மண்டகப்படிகாரர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்துள்ளனர்.