×

திருச்சுழி விவசாயிகள் கோரிக்கை பட்டாசு பதுக்கல்: 4 பேர் கைது

சிவகாசி மற்றும் சுற்றுப்புற பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி கிழக்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு வைத்திருந்ததாக சேவகன் (48), காளிராஜ் (51), கார்த்தீஸ்வரன் (45), தங்கமுனியப்பன் (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Tiruchuri ,
× RELATED திருச்சுழி பூமிநாதர் கோயில் அருகே...