×

சீட்டு கட்டிய பணத்தை கேட்டதால் செல்போன் கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்: தெலங்கானாவில் சிட்பண்ட் ஊழியர்கள் அராஜகம்

திருமலை: தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா டைலர் தெருவில் ராஜூ என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் அங்குள்ள தனியார் சிட்பண்டில் மாதச்சீட்டு செலுத்தி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீட்டு எடுத்துள்ளார். ஆனால் சிட்பண்ட் நிர்வாகம் பணத்தை தரவில்லையாம். பலமுறை சென்று கேட்டும் பணம் தராததால் விரக்தியடைந்த ராஜூ, நேற்றுமுன்தினம் சிட்பண்ட் அலுவலகத்திற்கு சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தனது கடைக்கு ராஜூ வந்துவிட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராஜூவின் செல்போன் கடைக்கு வந்த சிட்பண்ட் ஊழியர்கள், அவரை கடைக்கு வெளியே இழுத்து வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். உடல் முழுவதும் பற்றிய தீயால் அலறிதுடித்த ராஜூவை அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இருப்பினும் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிட்பண்ட் ஊழியர்களை தேடி வருகின்றனர். ராஜூ நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்….

The post சீட்டு கட்டிய பணத்தை கேட்டதால் செல்போன் கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்: தெலங்கானாவில் சிட்பண்ட் ஊழியர்கள் அராஜகம் appeared first on Dinakaran.

Tags : Chitfund ,Telangana ,Tirumala ,Raju ,Hanumakonda Tyler Street, Telangana ,
× RELATED டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது: தெலங்கானாவில் பரபரப்பு