×

காரையூரில் கிரிக்கெட் போட்டி 26 அணிகள் பங்கேற்பு

பொன்னமராவதி, மே 23: பொன்னமராவதி  அருகே உள்ள காரையூரில் கிரிக்கெட் போட்டி நடந்தது. காரையூரில் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் காரையூர், பொன்னமராவதி சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை கருவத்தான்பட்டி அணியினரும், இரண்டாம் பரிசை நெய்வேலி அணியினரும், மூன்றாம் பரிசை காரையூர் அணியினரும், நான்காம் பரிசை தூத்தூர் அணியினரும் வெற்றி பெற்றனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை  ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : teams ,cricket match ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல்...