×

வாக்கு எண்ணும் மையத்தில் சேலம் சரக டிஐஜி ஆய்வு

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது குறித்து மாவட்ட எஸ்பி அருளரசிடம் கேட்டறிந்தார். மேலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Tags : Salem ,vote count center ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...