புதுக்கோட்டை, மே21: புதுக்கோட்டைமாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு இசைப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7ம் வகுப்பு தேர்ச்சியும், நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுதப் படிக்க தெரிந்திருக்கவும் வேண்டும். 12 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். பயிற்சி கட்டணம் ரூ.152 ஆகும். அரசு சான்றிதழ் படிப்பான இந்த பயிற்சியில் அரசு துறையில் வேலை வாய்ப்புகளும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி வழங்க வாய்ப்புகளும் மற்றும் இலவச பஸ் சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவி தொகை அரசு விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரில் அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.