×

செவிலியர் தின விழா

காரைக்குடி, மே 19: காரை க்குடி காவேரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவகழகம் காரைக்குடி கிளை சார்பில் செவிலியர் தினம் கொண்டாப்பட்டது. காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் சலீம் வரவேற்றார். மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன் தலைமை வகித்து பேசுகையில், செவிலியர்கள் தான் ஒவ்வொரு மருத்துவமனையின் தூண்கள். பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இரவு, பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் செவிலியர்களே சிகிச்சை அளிக்கின்றனர் என பேசினார். பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்திய மருத்துவ கழக காரைக்குடி கிளை பொருளாளர் டாக்டர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காவேரி மருத்துவமனை நிர்வாகி டாக்டர் காமாட்சி சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Nursing Day Festival ,
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...