×

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாளை வைகாசி தேரோட்டம்

திருப்புத்தூர், மே 16: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயிலில் வைகாசிப் பெருவிழா கடந்த மே.9ம் தேதி துவங்கியது. 2ம் திருநாள் முதல் 8ம் நாள் வரை சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. 5ம் திருநாளில் திருத்தளிநாதர் சுவாமிக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருப்பூட்டு வைபவம் நடைபெற்றது.
9ம் திருநாளான நாளை மே.17ம் தேதி காலை 5.10 மணிக்கு மேல் 6 மணிக்குள் ஐம்பெரும் கடவுளர் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறும். பின்னர் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். மாலை 4.35 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். 10ம் திருநாளான மே 18ம் தேதி காலை 10.40 மணியளவில் திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். இரவு 8 மணியளவில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

Tags : Thiruppurthur Thiruthilinathar ,
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா