×

தெருவிளக்கை துணியால் மூடி நான்கு கடைகளில் கொள்ளை

மேலூர், மே 16:   மேலூர் சிவகங்கை சாலையில் உள்ள ஆட்டுக்குளம் விலக்கில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் பெட்டிக்கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடினர். முன்னதாக கடை முன்பு எரிந்த மின்சார விளக்கை துணியை கொண்டு மூடி வெளிச்சம் வராமல் பார்த்துக் கொண்டனர்.  பின்னர் அதன் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த சில பொருட்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர் எதிர்புறம் உள்ள ஒரு ஓட்டலின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பணம் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பினர். இத்திருட்டில் ஈடுபட்டவர்கள் காரில் வந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அதை நிறுத்திவிட்டு வந்து திருடியதாக கூறப்படுகிறது.  அதிக தொகை திருடு போகாததால் கடைக்காரர்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்க முன்வரவில்லை.

Tags : store robbers ,
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி