×

ஆன்மீக அமைப்பினர் சார்பில் ரங்கத்தில் வருண ஜெபம்

மண்ணச்சநல்லூர், மே 16: பாரதீய கிசான் சங்கம் மற்றும் அனைத்து ஆன்மீக அமைப்புகள் சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே வருண ஜெப விழா நடைபெற்றது. தமிழகம் மற்றும் கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து மேட்டூர் அணை நிரம்பி இருக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பவும், நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நலன் பெறவும் வேண்டி இந்த வருண ஜெபம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் நேற்று காலை 7 மணி முதல் 12.30 மணி வரை நடந்த ஜெபத்தில் கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர பாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : organizations ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!