×

தஞ்சை மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

பேராவூரணி, மே 16: பேராவூரணி தாசில்தார்  அலுவலகத்தில் தஞ்சாவூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பயிற்சி வகுப்பை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் துவக்கி வைத்தார். தாசில்தார் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கை பற்றிய சந்தேகங்களுக்கு தேர்தல் பிரிவு துணை தாசில்தார்  யுவராஜ் விளக்கம் அளித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு பெட்டிகளை கையாளுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது ரகசியம் காக்க வேண்டும். வெளிநபர்களிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். அலைபேசியை பயன்படுத்த கூடாது. கண்ணியத்துடனும், நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும். விதிமீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.  பயிற்சி வகுப்பில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags : constituency ,Thanjavur Lok Sabha ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...