×

போலீஸ்காரர் வீட்டில் திருட்டு

கோவை, மே 15: கேவை துடியலூர் அருகேயுள்ள ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (35). நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர். இவரது குடும்பத்தினர் பள்ளி விடுமுறையை முன்னிட்டு விருதுநகர் சென்று விட்டனர். ஜெயபிரகாஷ் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நேற்று முன் தினம் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து 6 பவுன் தங்க நகை மற்றும் பொருட்களை திருடி சென்றனர். இது ெதாடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theft ,home ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...