×

படகு இல்லத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி, மே 15: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்வதற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சமவெளிப்பகுதிகளில் வெயில் சுட்டெரிப்பதால் குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் தற்போது முகாமிட்டுள்ளனர். தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வமுடன் செல்கின்றனர். நேற்று ஏராளான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், படகு சவாரி செய்ய சுமார் 1 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
மோட்டார் படகுகள் மற்றும் மிதி படகுகிற்கு பல மணி நேரம் சுற்றுலா பயணிகள் காத்திருந்து சவாரி செய்தனர். மேலும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களின் மூலம் வந்திருந்ததால், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் படகு இல்லம் முன் புறம் உள்ள சாலைகளிலேயே நிறுத்தப்பட்டதால், அச்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Tags : boat home ,
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி பைக்காரா படகு...