×

வாறுகால் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை

வத்திராயிருப்பு, மே 15: வத்திராயிருப்பு அருகே, கூமாப்பட்டியில் வாறுகால் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி, பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்திராயிருப்பு அருகே, கூமாப்பட்டியில் உள்ள 9வது வார்டில் வாறுகால் கட்டுவதற்கு கடந்த 2 மாதத்திற்கு முன், பள்ளம் தோண்டினர். ஆனால், இன்னும் பணி தொடங்கப்படவில்லை. இதனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்கேடு உருவாகுகிறது. இதே வார்டில் குடிநீர் தொட்டி அருகே, கழிவுநீர் தேங்குவதால், பெண்கள் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், வாறுகால் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி, கூமாப்பட்டியில் உள்ள எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படவில்லை. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது தொடர்பாக வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் சரஸ்வதியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Tags : siege ,Panchayat Office ,rush ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து