×

படியூர் அருகே கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்கள்

காங்கயம், மே14: காங்கயம் அடுத்துள்ள படியூர் அருகே தொடர்ந்து ஆடு, மாடுகளைத் தெரு நாய்கள் கடித்துக் குதறுவதால் பாதுகாப்பு கோரி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். காங்கயம் அடுத்துள்ள படியூர் அருகே தெற்குப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், ‘‘எங்கள் பகுதியில் ஓடைப் புறம்போக்கு நிலத்தில் தனிநபர் நடத்தி வரும் மாட்டிறைச்சிக் கடைக்கு இறைச்சிக் கழிவுகளைத் தின்பதற்காக தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. இவை இரை கிடைக்காத சமயம் அதே பகுதியில் உலவும் ஆடு,மாடுகளை குறி வைத்து பாய்ந்து கடித்து குதறுகின்றன. நேற்று பாலசுப்ரமணியம் என்பவரது தோட்டத்தில் கட்டியிருந்த மாட்டுக் கன்றை கொடூரமாக கடித்ததால் அந்தக் கன்று உயிரிழந்து விட்டது. அதே போல கடந்த மாதமும் ஒரு கன்றுக் குட்டி உயிரிழந்துள்ளது. தெரு நாய்களின் தொல்லையால் ஆடு, கோழி, மாடுகளை நிம்மதியாக வளர்க்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’  என குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags : Padiyur ,
× RELATED காங்கேயம் படியூரில் 24ம் தேதி மேற்கு...