×

பில்லி, ஏவல், சூனியம் எடுப்பதாக கூறி சாமியார் கொடுத்த மருந்தை குடித்தவர் பலி

கோவை, மே 14:பில்லி, ஏவல், சூனியம் எடுப்பதாக கூறி சாமியார் கொடுத்த மூலிகை மருந்தை குடித்த திருப்பூர் டெய்லர் பலியானார். இது குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் ராயபுரம் ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ராஜ்குமார்(30). திருப்பூர் பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. கர்ப்பமாக இருந்த ராஜ்குமாரின் மனைவி பிரசவத்திற்காக தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், ராஜ்குமார் உடல் சோர் வு, கை, கால் வலி, பயம், தூக்கமின்மை கெட்ட கனவு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து தன் உறவினர்களிடமும், அருகில் வசிப்பவர்களிடமும் அடிக்கடி கூறி வந்தார்.அப்போது, ராஜ்குமாரின் நண்பர்கள் சிலர், கோவை மாவட்டம் கேரள எல்லையில் உள்ள வேலந்தாவளம் ஓலைபதி கருப்பசாமி கோவிலில் தங்கி மூலிகை மருந்து குடித்தால் நோய்கள் அனைத்தும் குணமாகும் என அவரிடம் தெரிவித்தனர்.



 இதையடுத்து ராஜ்குமார் தன் உறவினர்களுடன் வேலந்தாவளம் அருகே உள்ள ஓலைபதி கருப்பசாமி கோயிலுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்றார். அங்கு சாமியார் ஒருவர் உங்கள் குடும்பத்தை அழிக்க பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை நடத்தி பில்லி, சூனியம், ஏவலை எடுக்க ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என கூறினார். இதனை, நம்பி ராஜ்குமார் சாமியாரிடம் ரூ.20 ஆயிரம் பணம் ெகாடுத்தார். பணத்தை வாங்கி கொண்ட சாமியார்  தினசரி பூஜை நடத்தி மூலிகை மருந்தை கொடுத்துள்ளார். சாமியார் ராஜ்குமாருக்கு நேற்று முன்தினம் 2 பாட்டில் மூலிகை மருந்து கொடுத்துள்ளார். அதன்படி ராஜ்குமார் மூலிகை மருந்து குடித்த போது கோயில் வளாகத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன உறவினர்கள் ராஜ்குமாரை ேகாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது ராஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ராஜ்குமார் சாவுக்கு காரணமான சாமியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழிஞ்சாம்பாறை போலீசில் புகார் அளித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Billy ,samayar ,
× RELATED பில்லி ஜீன் கிங் கோப்பை: கனடா சாம்பியன்