×

இலக்கிய கூட்டம்

காரைக்குடி, மே 14:  காரைக்குடி வள்ளுவர் பேரவையின் இலக்கிய கூட்டம் நடந்தது. நிறுவனத் தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். வள்ளுவர் பேரவை கவுரவ தலைவர் சுபம் தியாகராஜன் தலைமை வகித்தார். தென்றல் ஐஏஎஸ் அகடமி இயக்குநர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார். கார்த்திகேயன் பள்ளி தாளாளர் சுவேதா ஜீவானந்தம், அரிமா வைரமணி, ரோட்டரி முத்துக்குமார், ஸ்டீபன் மிக்கேல்ராஜ், நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி திருக்குறளை ஒப்பித்து தமிழ், ஆங்கிலத்தில் விளக்கம் கூறினார். திருக்குறள் செல்வி ஜோசி அபர்ணா 20 அதிகாரிகளுக்கு பொருள் விளக்கத்தை கதைகளோடு கூறினார். மாணவர் சஞ்சய் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்குறள் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. செயலாளர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் நன்றி கூறினார்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...