×

திருப்புத்தூர் அருகே நின்ற லாரியில் டூவீலர் மோதி நாதஸ்வர கலைஞர் பலி

திருப்புத்தூர், மே 14: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர்-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரியில் டூவீலர் மோதியதில் நாதஸ்வர கலைஞர் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள லால்குடி வெட்டிவயலைச் சேர்ந்தவர் கணேசன்(55). இவரது மகன் வெங்கடேசன்(27). இவர்கள் இருவரும் நாதஸ்வர கலைஞர்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் திருப்புத்தூர் அருகே வடவன்பட்டியில் நடந்த கோயில் விழாவில் நாதஸ்வரம் வாசித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு டூவீலரில் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகே சித்தாலங்குடியைச் சேர்ந்த கோடாங்கி மகன் குமார்(44) என்பவர் கமுதியில் இருந்து சென்னைக்கு டாரஸ் லாரியில் எம்சென்ட் மணல் ஏற்றிக்கொண்டுவந்துள்ளார். அப்போது திடீரென டீசல் டியூபில் பழுது ஏற்பட்டு வண்டி திருக்கோஷ்டியூர் அருகே நின்றுவிட்டது.

அப்போது டாரஸ் லாரி இருட்டில் நிற்பது தெரியாமல் டூவீலரில் வந்தவர்கள்  பின்புறம் மோதியுள்ளனர். இதில் கணேசன் மற்றும் அவரது மகன் வெங்டேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைகாக இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கணேசனின் உறவினர் திருக்கோஷ்டியூர் மேலத்தெருவைச்சேர்ந்த ராமு(55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திருக்கோஷ்டியூர் காவல்நிலைய எஸ்.ஐ., அர்ச்சுணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்

Tags : artist ,Toweler Moti Nathaswara ,lorry ,Tiruputhur ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்