×

புலிப்பட்டியில் ஒரு வாரமாக குடிநீர் கிடைக்கவில்லை காலிக்குடத்துடன் மக்கள் சாலைமறியல்

மேலூர், மே 14: மேலூர் அருகே கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலூர் அருகில் உள்ள புலிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என கூறி கடந்த ஏப்.29ல் மேலூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பிடிஓ உறுதி அளித்ததை தொடர்ந்து அப்போது அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும், கடந்த ஒரு வாரமாக குடிநீர் சுத்தமாக வராததை கண்டித்தும் நேற்று புலிப்பட்டியை சேர்ந்த ஏராமான பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளிமலைப்பட்டி சாலையில் இவர்கள் மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக வந்த அரசு பஸ் உட்பட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.

2 மணி நேரம் நீடித்த சாலை மறியலை தொடர்ந்து மேலூர் பிடிஓ சங்கர் கைலாசம் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
3 நாட்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

Tags : tiger cemetery ,
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்