×

கரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் சீத்தை முட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அவலம்

கரூர், மே 14:  ஆண்டாங்கோயில் பகுதியில் சீத்தை முட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுஏற்படுகிறது. கரூர் ஆண்டாங்கோயில் பகுதி விரிவாக்கப்பகுதியாக உள்ளது. ஏராளமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள பகுதி. இங்கு போதுமானஅளவில் குப்பைதொட்டிகள் இல்லை.குப்பை மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.மேலும் ஒதுப்புறமாக உள்ளசீத்தை முட்களை அவ்வப்போத தீ வைத்துஎரிக்கின்றனர்.இதனால் சுற்றுவட்டார பகுதி முழுவதும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகைமண்டலம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு மாசுஏற்பட்டு காற்று மாசு ஏற்படுகிறது. முட்களையும், குப்பைகளையும் எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

Tags : burning ,area ,Andurango ,Karur ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி