×

பழநி அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி

பழநி, மே 10: பழநி அருகே கோரிக்கடவு பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பழநி அருகே கோரிக்கடவு கிராமத்தில் சிஜிஎம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1998 முதல் 2003 வரை படித்த மாணவ, மாணவியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் ஆசிரியர்கள் முத்துக்கிருஷ்ணன், சதக்கத்துல்லா ஆகியோருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி கல்வியை முடித்த பின்பு தங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒவ்வொருவரும் மேடைக்கு சென்று எடுத்துரைத்தனர். இதில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். ஏழை மாணவர்களுக்கு வருடந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்குவதென நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டது.

Tags : alumni meeting ,Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்