×

பேரூராட்சி குறித்து வலைதளத்தில் அவதூறு

ஆத்தூர், மே 9: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றுபவர் அப்துல் சாதிக்பாஷா. இவர் நேற்று மல்லியகரை போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், கீரிப்பட்டி பேரூராட்சி 7வது வார்டு பகுதியை சேர்ந்த வில்லங்கம் (எ) குமரவேல், பேரூராட்சி அலுவலகத்தில் தேவையின்றி நுழைந்து பணியாளர்களையும் என்னையும் பணி செய்ய விடாமல் தடுத்தார். அரசு கோப்புகளை செல்போனில் படம் பிடித்து மிரட்டுகிறார். குடிநீர் விநியோக பைப்லைன் மற்றும் தெரு விளக்குகளை எரிய விடாமல் பணியாளர்களை மிரட்டும் செயலிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், பேரூராட்சி குறித்து தவறாக தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் குமாரவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். தொடர்ந்து புகார் மனுவினை பெற்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Panorama ,
× RELATED புனே பட விழாவில் காதல் என்பது பொதுவுடைமை