×

மணப்பாறையில் மது பதுக்கி விற்ற 7 பேர் கைது பறக்கும் படையினர் அதிரடி

மணப்பாறை, மே 9:  மணப்பாறையில்  மது பதுக்கி விற்ற 7 பேரை  பறக்கும் படையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மண்டல பறக்கும் படை அலுவலரும் டாஸ்மாக்  துணை கலெக்டருமான மாலதி தலைமையில் சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள்  மணப்பாறையில் அதிரடி சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாக மதுபான விற்பனைகள் குறித்த கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சி - திண்டுக்கல் தேசிய -நெடுஞ்சாலை அருகே உள்ள 4  மதுபான கூட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்ற மாமுண்டி, சுப்பிரமணி, சக்திவேல், பழனிசாமி உள்ளிட்ட நான்கு பேர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள  170 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மதுபாட்டில்களை பிடித்த பறக்கும் படையினர் மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது போல துவரங்குறிச்சி பகுதியில் துணை கலெக்டரும் பறக்கும் படை அதிகாரியுமான ராஜ் அதிரடியாக ரெய்டு செய்து சுப்பிரமணி, முருகன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 75 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : soldiers ,wedding ceremony ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து