×

கொளுத்தும் கத்திரி வெயிலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம் கலெக்டர் அறிவுரை

புதுக்கோட்டை,மே9: கொளுத்தும் கத்திரி வெயிலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது என்று கலெக்டர் கூறினார். புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கால்நடைகளை கோடை காலங்களில் குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் பாதிப்புகளில் இருந்து சரியான பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாக்கலாம். அந்த வகையில் கால்நடைகளை கடும் வெப்பம் நிலவும் பகல் நேரத்தில் மர நிழலிலோ அல்லது காற்றோட்டமான நிழலுடன் கூடிய திறந்த வெளியில் கட்டி வைக்க வேண்டும். கால்நடைகளின மீது தண்ணீர் தெளித்து கழுவுவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது.

குறிப்பாக அதிகாலையில் மேய்ச்சலுக்கு அனுப்பி கடும் வெயில் ஆரம்பிக்கும் முன் கொட்டிலுக்குள் திருப்பி அனுப்பிட வேண்டும். மேலும் பசுந்தீவனம் அதிகமாக அளிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம். மாடுகளுக்கு கருவூட்டல் செய்யும் பொழுது வெப்பம் தாழ்ந்த நேரத்தில் செய்தல் வேண்டும். செயற்கை கருவூட்டல் செய்த பிறகு மாடுகளை சிறிது நேரம் நிழலில் கட்டி வைத்து விட்டு, பிறகு ஓட்டுதல் வேண்டும். மேற்கூறிய பராமரிப்பு முறைகளை பின்பற்றி கோடை காலங்களில் கால்நடைகளை நாம் பாதுகாக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அனுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...