×

அரசு ஐடிஐயில் வளாகத் தேர்வு

சிவகங்கை, மே 9: சிவகங்கை முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் நாளை (மே.10) வளாகத் தேர்வு (கேம்பஸ் இண்டர் வியூ) நடைபெற உள்ளது. இது குறித்து ஐடிஐ முதல்வர் பாலமுருகன் கூறியதாவது: சிவகங்கை முத்துப்பட்டி அரசு ஐடிஐயில், நாளை காலை 9 மணியளவில் தனியார் நிறுவனம் மற்றும் அரசு ஐடிஐ இணைந்து நடத்தும் வளாக நேர்காணல் (கேம்பஸ் இண்டர்வியூ) நடைபெறவுள்ளது. இதில் பொருத்துநர் (பிட்டர்), மற்றும் கடைசலர் (டர்னர்) பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே, மேற்காணும் தொழிற்பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் சிவகங்கை முத்துப்பட்டி அரசு ஐடிஐக்கு நேரில் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அரசு ஐடிஐ பணியமர்த்தும் அலுவலரை 9499055783 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.


Tags : Government ,campus ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...