×

டாஸ்மாக் கடையில் பெயிண்டருக்கு கத்திக்குத்து

ஈரோடு, மே 9: ஈரோடு கொல்லம்பாளையம் நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (37). பெயிண்டர். இவரது மனைவி நளினி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் நேற்று மாலை நண்பர்களுடன் நாடார்மேடு டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், மஞ்சுநாதனின் நண்பர் ஒருவர் ஆத்திரம் அடைந்து, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுநாதனின் உடலில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மஞ்சுநாதன் மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மஞ்சுநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து  செந்தில் (42) என்பவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : painter ,shop ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை