×

எஸ்.ஐ மீது தாக்குதல் : போதை வாலிபர் கைது

திருவொற்றியூர், மே 9: திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜான் பீட்டர் வியானி  மற்றும் தலைமை காவலர் வினாயக மூர்த்தி ஆகிய இருவரும்  திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில்  சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த எண்ணூர், வள்ளுவர் நகரை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணிகண்டன் மது அருந்தி இருந்தது தெரிந்தது. எனவே அவரை பைக்கில் இருந்து இறங்குமாறு உதவி ஆய்வாளர் கூறியுள்ளார். இதில் மணிகண்டனுக்கும், உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் போக்குவரத்து உதவி ஆய்வாளரை கீழே தள்ளி அவரது சீருடையை கிழித்துள்ளார். பின்னர் அவரது வாக்கிடாக்கியை பறித்து கீழே தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Attack ,detainee ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...