×

வீட்டில் புகுந்து நகை, பணம் திருடிய வழக்கு பிரபல கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை, மே.8: கோவை நகரில் பல்வேறு இடங்களில் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  கோவை துடியலூர் ஜி.என்.மில் அருண் நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிட காண்டிராக்டர். கடந்த ஏப்ரல் 3ம் தேதி கார்த்திக் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தார். அவரது மனைவி, குழந்தையை எடுத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் வேலைக்கார பெண் சத்தியபாமா மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 2 பேர் சத்தியபாமாவை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த 35 பவுன் நகை, மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக துடியலூர் போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களில் சென்னை மயிலாப்பூர் சத்யா நகரை சேர்ந்த தங்கராஜ்(27). என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே கோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். அதன்பேரில், தங்கராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி நேற்று உத்தவிட்டார். அதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

Tags : house ,
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?