×

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகளத்திற்கு நான்கு பேர் தேர்வு

மதுரை, மே 8: மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகள போட்டிக்கு பெண் உள்பட நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச அளவிலான தடகள விளையாட்டு போட்டி மொரோக்கா நாட்டில் சமீபத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் 16 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பயிற்சியாளரும் மேனேஜருமான ரஞ்சித்குமார் தலைமையில் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழக வீரர் மனோஜ், 100மீ., 200மீ., வீல்சேர் போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை பெற்றார். வீராங்கனை ரூபா, எப்.46 எடைப்பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். வீரர் கணேசன், வட்டு எறிதலிலும், வீரர் பிரசாந்த் 34 எடை கிலோ பிரிவு குண்டு எறிதல் போட்டிகளில் 4ம் இடம் ெபற்றனர். இதன் மூலம் இவர்கள் துபாயில் நடக்க இருக்கும் உலக அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி உள்பட பலரும் பாராட்டினர்.

Tags : World Athletes for Disabled ,
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்