சோழவந்தான், மே 8: சோழவந்தான் அருகே குருவித்துறை அய்யப்ப நாயக்கன்பட்டியில் பத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி கரகம் எடுத்தலுடன் துவங்கிய விழாவில், தினமும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் இரண்டாம் நாள் திருவிளக்கு பூஜை, மாவிளக்கு, பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் வரும் 12ம் தேதி கோயிலில் மறுபூஜை நடக்கிறது.