×

புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், மே 8: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள்  மற்றும் விவசாயிகள் வந்து செல்கின்றனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர். இந்நிலையில், நேற்று கூடிய சந்தையில் சுற்றுப்பகுதியிலிருந்து அதிக அளவிலான மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

ரமலான் நோன்பு தொடக்கத்தால் கேரளா, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகளை வாங்க வியாபாரிகள் அதிகம் வந்தனர். இதனால் மாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ₹22 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு நேற்று ₹23 ஆயிரத்திற்கும், 43 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹44 ஆயிரத்திற்கும், 16 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டிகள் ₹17 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட நேற்று ₹1000 கூடுதலாக விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : bush ,
× RELATED தீபாவளிக்கு ரெடியான ‘குட்டி ஜப்பான்’: புஷ்ஷ்… டம்… டமார்…