×

வாழப்பாடி அருகே மூதாட்டியின் காதை கிழித்து தோடு பறிப்பு

சேலம், மே 8: வாழப்பாடி அருகே மூதாட்டியின் காதை கிழித்து தோடு பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய தோட்டத்தில் பாப்பா (65) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த 2 பேர், மூதாட்டி காதில் அணிந்திருந்த தோடை கழற்ற முயன்றனர். முடியாததால் தோடை இழுத்ததில், காது கிழிந்தது. இதனால் பாப்பா வலியால் கதறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் இருவரும் ஓட்டம் பிடித்தனர். ஒருவர் தப்பிய நிலையில், டூவீலருடன் மற்றொருவர் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அவரை, வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த செல்வம் (44) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மாடுகள் வரத்து அதிகரிப்பு