×

தங்கச்சாலை தெருவில் ஆக்கிரமிப்பு:



நகரில் உள்ள சொக்கலிங்கபுரம், வெள்ளைக்கோட்டை, திருச்சுழி ரோடு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அண்ணாசிலை பகுதியில் பொருட்களை வாங்குவதற்காக தங்கச்சாலை தெரு வழியாக வந்து செல்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தங்கச்சாலை தெருவில் உள்ள பட்டுநூல்  மற்றும் கைத்தறி நூல் கடைகளுக்கு சரக்குகள் லாரிகள் மூலம் சரக்குகள் இறக்கப்பட்டன. ஆனால், தற்போது டூவீலர்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு தங்களது டூவீலர்களை கடைகளுக்கு முன்பு நிறுத்துகின்றனர். இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க...
]
நகரில் உள்ள அண்ணாசிலை பகுதி, தங்கச்சாலை தெரு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அப்பகுதிகளில் நிறுத்தப்படும் டூவீலர்களை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை:நகரில் போக்குவரத்து போலீசார்  பற்றாக்குறையாக உள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகர் போக்குவரத்து காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர்,  2 எஸ்எஸ்ஐக்கள் மற்றும் 10 போலீசார் உள்ளனர். இதில் ஒரு சில  போலீஸ்காரர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், குறிப்பிட்ட  ஒரு சில பாயிண்ட்களில் மட்டுமே போலீசார் போக்குவரத்தை முறைப்படுத்துகின்றனர்.  எனவே, அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்தை நெரிசலை தவிர்க்க போதிய போக்குவரத்து  போலீசாரை நியமிக்க வேண்டும். போக்குவரத்து பிரிவில் உள்ள போலீஸ்காரர்களை  மாற்றுப்பணிக்கு அனுப்பாமல், கூடுதலாக போலீஸ்காரர்களை நியமிக்க மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?வெளியிடங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது

Tags : Thangkala Street ,
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை