×

சோழவந்தான் அருகே டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

சோழவந்தான், மே 7: சோழவந்தான் அருகே அடையாளம் தெரியாத வாகனம்  மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன்  மணிகண்டன்(20). இவர் பரவையில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்து  வருகிறார். நேற்று பணி முடிந்து மணிகண்டனும், உடன் பனிபுரியும்  முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த மதன்குமார்(21), அருண்குமார்(20), தீபக்(19) ஆகிய  நால்வரும் ஒரே டூவீலரில் ஊருக்கு வந்துள்ளனர். நகரி-சோழவந்தான் சாலையில்  உள்ள பத்திரிக்கை அலுவலகம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம்  மோதியதில், டூவீலரை ஓட்டி வந்த மணிகண்டன் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மதன்குமார், அருண்குமார், தீபக் மூவரும்  மதுரை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து  சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய  வாகனத்தை தேடிவருகிறார்.   
 

Tags : coworker ,Cholavanthan ,
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’