×

மேலூர் அருகே சூறாவளியால் ஒடிந்து விழுந்த வாழை, தென்னைகள் 3 வீடுகள் சேதம்

மேலூர், மே 7: மேலூர் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் வாழை, தென்னை மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது.மேலூர் பகுதியில் நேற்று முன்தினம் கருங்காலக்குடி, கம்பூர், மங்களாம்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் மங்களாம்பட்டி பகுதியில் மட்டும் அந்த சூறைக்காற்று பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றது. அப்பகுதியில் உள்ள பல ஏக்கர் வாழைகள், தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்தன.இத்துடன் மங்களாம்பட்டியில் உள்ள காக்கையன், ராஜேந்திரன், அய்யாவு ஆகியோரின் வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்து விழுந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் தர வேண்டும் என அப்பகுதி மக்களும், சேதமடைந்த வாழை மற்றும் தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : houses ,Melur ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்