×

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை: திருமணமான 4 நாளில் பரிதாபம்

சென்னை:  விழுப்புரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (26), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் திருக்கோவிலூரை சேர்ந்த மீனா (24) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். விழுப்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் காதல் விவகாரம் சந்தோஷ்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ‘காதலித்து ஏமாற்ற பார்க்கிறார்’ என்று சந்தோஷ்குமார் மீது மீனா புகார் செய்தார். இதனால் சந்தோஷ்குமார், மீனாவை கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மீனா ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இதனால் மேற்கு மாம்பலம் பரோடா தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருமண ஜோடி தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு மீனா சென்றிருந்தார். சாமி கும்பிட்டுவிட்டு தனது கணவருக்கு போன் செய்தார். ஆனால் நீண்ட நேரமாக சந்தோஷ்குமார் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மீனா அருகில் இருந்தவர்களை தனது வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார்.

அவர்கள் சென்று ஜன்னல் வழியே பார்த்தபோது சந்தோஷ்குமார் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிந்தது. உடனடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...