×

பந்தலூர் பாறைக்கல் பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை

பந்தலூர், மே. 7: பந்தலூர் பஜார் பாறைக்கல் சாலைப்பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை.  பந்தலூர் பஜார் அருகே பாறைக்கல் சாலைப்பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் தற்போது வரை தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து நெல்லியாளம் நகராட்சிக்கு புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் தெருவிளக்குகளை சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Pandalur ,area ,
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்